செய்திகள்
கோப்புப்படம்

டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 100 பேர் மீது வழக்கு

Published On 2020-04-02 09:44 GMT   |   Update On 2020-04-02 09:44 GMT
டெல்லியில் நடைபெற்ற மத நாட்டில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

அவ்வாறு திரும்பியவர்களில் தெலுங்கானாவில் 6 பேர், காஷ்மீரில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் யார்-யார்? என கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அரசின் தடை உத்தரவை மீறி மாநாடு நடைபெற்றதாக, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் ஏராளமான வெளிநாட்டினரும் பங்கேற்றது தெரியவந்தது.

இந்தநிலையில் மாநாட்டில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் சுற்றுலா விசாவில் பயணித்த நிலையில், விசா விதிகளை மீறி மதம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்றதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

இதுதொடர்பாக மொத்தம் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்ற 236 வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News