செய்திகள்
மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியை உடனே விடுவியுங்கள் - பிரதமருக்கு மம்தா கடிதம்

Published On 2020-04-01 13:00 GMT   |   Update On 2020-04-01 13:00 GMT
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் முதல் மந்திரியான மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்துள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியும் காலதாமதமாகிறது.
 
இதுதொடர்பாக, ஏற்கனவே பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியுள்ளேன். எனவே, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைவாக கிடைக்கும்படி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News