செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நிதியுதவி

Published On 2020-04-01 09:54 GMT   |   Update On 2020-04-01 09:54 GMT
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் 1125 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  நாட்டு மக்களுக்கு உதவ நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள், பெரிய கம்பெனிகள்  நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், விப்ரோ நிறுவனம் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 1125 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News