செய்திகள்
தலாய்லாமா

கொரோனா வைரஸ் தடுப்புக்கான பிரதமர் நிதிக்கு தலாய்லாமா நன்கொடை

Published On 2020-04-01 04:38 GMT   |   Update On 2020-04-01 04:38 GMT
இமாசலபிரதேசத்தில் தரம்சாலாவில் தங்கியுள்ள திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா பிரதமர் நிதிக்கு தனது அறக்கட்டளையில் இருந்து நன்கொடை வழங்கி உள்ளார்.
தர்மசாலா :

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி திரட்டுகிற ‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கு (பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசரகால சூழ்நிலை நிதி) பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இமாசலபிரதேசத்தில் தரம்சாலாவில் தங்கியுள்ள திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவும், பிரதமர் நிதிக்கு தனது அறக்கட்டளையில் இருந்து நன்கொடை வழங்கி உள்ளார். அவரது அலுவலக ஊழியர்களும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை பிரதமர் நிதிக்கு நன்கொடையாக அளித்து உள்ளனர். இதையொட்டி அவர் பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.

அதில் அவர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரதமர் மோடி எடுத்து வருகிற நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரசால் கஷ்டங்களை சந்தித்து வருகிற மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தனது நன்கொடை உதவியாக இருக்கும் எனவும் கூறி உள்ளார்.
Tags:    

Similar News