செய்திகள்
இந்த மாதம் முழுவதும் ராஜ்பவனை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி ரத்து
கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி வரை பொதுமக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பை :
மும்பை மலபார்ஹில் பகுதியில் ராஜ் பவன் உள்ளது. இதை தினமும் காலை நேரத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31-ந் தேதி வரை பொது மக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி வரை பொதுமக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ராஜ்பவனை பார்வையிட முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு வேறுநாளில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
மும்பை மலபார்ஹில் பகுதியில் ராஜ் பவன் உள்ளது. இதை தினமும் காலை நேரத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31-ந் தேதி வரை பொது மக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி வரை பொதுமக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ராஜ்பவனை பார்வையிட முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு வேறுநாளில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.