செய்திகள்
மும்பை ராஜ்பவன்

இந்த மாதம் முழுவதும் ராஜ்பவனை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி ரத்து

Published On 2020-04-01 03:50 GMT   |   Update On 2020-04-01 03:50 GMT
கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி வரை பொதுமக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பை :

மும்பை மலபார்ஹில் பகுதியில் ராஜ் பவன் உள்ளது. இதை தினமும் காலை நேரத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31-ந் தேதி வரை பொது மக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி வரை பொதுமக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ராஜ்பவனை பார்வையிட முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு வேறுநாளில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News