செய்திகள்
கொரோனா வைரஸ்

ஜார்க்கண்டில் முதல் கொரோனா தொற்று உறுதியானது

Published On 2020-03-31 13:01 GMT   |   Update On 2020-03-31 13:46 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
ராஞ்சி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் முறையாக ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜார்க்கண்டில் மலேசியா நாட்டை சேர்ந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News