செய்திகள்
பினராயி விஜயன்

கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு

Published On 2020-03-27 13:47 GMT   |   Update On 2020-03-27 13:47 GMT
கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது, இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு இதுவரை 700 -க்கு மேற்பட்டோர் இந்த கொடூர வைரசின் கரங்களில் சிக்கியிருந்தனர். இதில் டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களை சேர்ந்தோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் காசர்கோடு பகுதியில் 34 பேருக்கும், கண்ணூரில் 2 பேருக்கும், திரிச்சூர்,கொல்லம், கோழிக்கோட்டில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியது.

இவர்கள் அனைவரையும் சேர்த்து அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து உள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News