செய்திகள்
கொரோனா பாதிப்பு - 51 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட்
கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு 51 கோடி ரூபாயை ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் வழங்கியுள்ளது.
மும்பை:
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு 51 கோடி ரூபாயை
ஷீரடி சாய்பாபா கோவிலை நிர்வகிக்கும் ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் இன்று வழங்கியது.