செய்திகள்
பிரதமர் மோடி

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு

Published On 2020-03-27 08:15 GMT   |   Update On 2020-03-27 08:15 GMT
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது;-  கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது பொருளாதாரத்தை காக்க ரிசர்வ் வங்கி மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், நடுத்தர வர்க்கத்தினருக்கும் வணிக, தொழில்துறையினருக்கும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News