செய்திகள்
மம்தா பானர்ஜி

2 பெண்களுக்கு மம்தா அளித்த மகளிர் தினப் பரிசு

Published On 2020-03-08 09:55 GMT   |   Update On 2020-03-08 09:55 GMT
பாராளுமன்ற மேல்சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இரு பெண் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, பாராளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக இருக்கும் 4 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், அந்த பதவிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய இரு பெண்கள் மற்றும் தினேஷ் திரிவேதி, சுப்ரதா பக்‌ஷி ஆகியோர் நால்வரை அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.



சர்வதேச மகளிர் தினமான இன்று இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மம்தா, ‘வேட்பாளர்களில் சரிபாதி பேர் பெண்கள்.., பெண்களுக்கு அதிகாரமளிக்கும் எனது முயற்சியில் இதுவும் ஒரு பகுதி’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News