செய்திகள்
அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி சந்திப்பு
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
டெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினர். சிஏஏ, என்பிஆர் தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.