செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள்

அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-03-02 08:32 GMT   |   Update On 2020-03-02 08:32 GMT
உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தது. 

இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. பாராளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில், அமித் ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். கோரிக்கை வாசகம் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். 

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News