செய்திகள்
ஆதித்ய தாக்கரே

பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மகாராஷ்டிரா மாறும்: ஆதித்ய தாக்கரே

Published On 2020-02-29 02:18 GMT   |   Update On 2020-02-29 02:19 GMT
வருகிற மே 1-ந் தேதிக்குள் மகாராஷ்டிரா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாறும் என மந்திரி ஆதித்ய தாக்கரே மேல்-சபையில் அறிவித்தார்.
மும்பை

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில, நேற்று மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், கேரி பைகள், கப் மற்றும் தட்டுகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பொருட்கள் இன்னும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்று பேசினார்.

இதற்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே பதிலளித்து பேசுகையில், “வருகிற மே 1-ந் தேதிக்குள் மகாராஷ்டிரா ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி எனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். குளிர்பானங்களின் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Tags:    

Similar News