செய்திகள்
கொரோனா வைரஸ்

தென்கொரியா-ஜப்பான் நாட்டினர் இந்தியாவுக்கு வர தடை

Published On 2020-02-28 06:48 GMT   |   Update On 2020-02-28 06:48 GMT
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஜப்பான், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

டெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட 37 நாடுகளுக்கு பரவி உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 13 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

அதே போல ஜப்பானில் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்த பயணிகள் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் ஜப்பான் நாட்டிலும் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பான், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இந்திய தூதரகம் கூறும்போது, “ஜப்பான்-தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வந்த பிறகு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது” என்று கூறியுள்ளது.

Tags:    

Similar News