செய்திகள்
அஜித் தோவல் மற்றும் துணை ஆணையர் சந்திப்பு

டெல்லி வன்முறை : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் டெல்லி துணை ஆணையர் அவசர ஆலோசனை

Published On 2020-02-25 20:20 GMT   |   Update On 2020-02-25 20:20 GMT
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வடகிழக்கு டெல்லியின் துணை ஆணையருடன் இன்று அவரசர ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 

வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்றுவரை நடந்த மோதல்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி நிலவரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வடகிழக்கு டெல்லியின் துணை ஆணையர் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது வன்முறையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

இதற்கிடையில், வடகிழக்கு டெல்லியின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

Tags:    

Similar News