செய்திகள்
சித்தராமையா

டிரம்ப் நிகழ்ச்சியை காஷ்மீரில் நடத்துங்கள்- சித்தராமையா வேண்டுகோள்

Published On 2020-02-25 03:26 GMT   |   Update On 2020-02-25 03:26 GMT
இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சியை காஷ்மீரில் நடத்துங்கள் என்று கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகையையொட்டி கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக இந்தியா கருதினால், அரசால் திட்டமிடப்பட்ட வன்முறைகள் அங்கு நடைபெறவில்லை என்று நினைத்தால், அதை நிரூபிக்க இதுவே சரியான தருணம். அதாவது இந்தியா வந்துள்ள டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சியை காஷ்மீரில் நடத்துங்கள். டிரம்ப் வருகையையொட்டி ஆமதாபாத் விமான நிலையம் அருகே குடிசை பகுதிகளை மறைக்க சுவர் கட்டியுள்ளனர். பிரதமர் மோடியிடம் இருந்து உந்துசக்தியை டிரம்ப் பெற அவருக்கு இது சரியான நேரம். மிக அழகற்ற வாழ்விடத்தை மறைக்க அழகான சுவர்களை கட்ட அவருக்கு உந்துசக்தி கிடைக்கும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News