செய்திகள்
சாலை விபத்து

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்

Published On 2020-02-23 03:08 GMT   |   Update On 2020-02-23 03:08 GMT
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள மல்ஹார் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்தது.

இதனால் நிலைதடுமாறிய அந்த கார் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தள்ளனர். 

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News