செய்திகள்
சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் 2 ஹாக்கி வீரர்கள் சுட்டுக்கொலை

Published On 2020-02-21 06:44 GMT   |   Update On 2020-02-21 06:44 GMT
பஞ்சாப்பில் 2 ஹாக்கி வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியாலா:

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த  ஹாக்கி வீரர் அம்ரிங்சிங். தேசிய அளவில் விளையாடி வருகிறார். இவரது நண்பர் சிம்ரஜித்சிங். இவரும் ஆக்கி வீரர் ஆவார்.

இருவரும் பஞ்சாப் மாநில எரிசக்தித்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

அம்ரிங் சிங்கும், சிம்ரஜித் சிங்கும் பாட்டியாலா பிரதாப் நகர் பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர். அப்போது அவர்களுக்கும், மனோஜ்குமார் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தை-மகன் இருவரையும் ஹாக்கி வீரர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ்குமார் வீட்டுக்கு சென்று துப்பாக்கியை எடுத்து வந்தார்.

அவர் ஹாக்கி வீரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் இருவரும் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்கள்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாக்கி வீரர்களை சுட்டுக் கொன்ற தந்தை- மகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் பாட்டியாலா பகுதியில் உள்ள உணவு விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News