செய்திகள்
மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி

மத்திய அரசின் நிதி குறைப்பு - பிரதமருக்கு மம்தா கடிதம்

Published On 2020-02-20 13:01 GMT   |   Update On 2020-02-20 13:01 GMT
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியின் அளவு குறைக்கப்பட்டது தொடர்பாக மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் முதல் மந்திரியான மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு சமீபகாலமாக குறைந்துள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியும் காலதாமதமாகிறது.

எனவே, மத்திய அரசு வழங்க வேண்டிய தேவையான நிதியை குறைக்காமலும், மத்திய அரசு அறிவித்துள்ள நிதி விரைவாக கிடைக்கும்படி செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News