செய்திகள்
விபத்துக்குள்ளான கார்

மகாராஷ்டிரா: லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

Published On 2020-02-20 10:20 GMT   |   Update On 2020-02-20 11:37 GMT
மகாராஷ்டிராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுச்சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 13 பேர் பயணித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சந்திரபூர்-முல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  
Tags:    

Similar News