செய்திகள்
பா.ஜனதா எம்எல்ஏ ரவிந்தர நாத் திரிபாதி

பெண் கற்பழிப்பு புகார்: உ.பி. பா.ஜனதா எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர். பதிவு

Published On 2020-02-19 12:41 GMT   |   Update On 2020-02-19 12:41 GMT
ஓட்டலில் அடைத்து வைத்து சுமார் ஒரு மாதமாக கற்பழித்தனர் என பெண் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் பா.ஜனதா எம்எல்ஏ மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பதோஹி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் பா.ஜனதா-வைச் சேர்ந்த ரவிந்தர நாத் திரிபாதி. இவருடன் மேலும் ஆறு பேர் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு கற்பழித்ததாக கடந்த 10-ந்தேதி 40 வயதுடைய பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த பெண் ‘‘2017-ல் ரவிந்த்ர நாத் திரிபாதி உள்பட 7 பேர் என்னை ஒரு ஓட்டலில் அடைத்து வைத்து ஒரு மாதமாக கற்பழித்தனர். இதில் நான் கர்ப்பமானேன். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகார் கூறியிருந்தார்.

புகாரில் உண்மை இருக்கிறதா? என்பதை ஆராய போலீஸ் துணை சூப்பிரண்டிடம்  இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார். இதனடிப்படையில் பா.ஜனதா எம்எல்ஏ உள்பட ஏழு பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

நீதிபதி முன்பு அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்படும். சட்டப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை சூப்பிரண்டு ரவிந்த்ர வர்மா தெரிவித்தார்.
Tags:    

Similar News