செய்திகள்
ராகுல் காந்தி

தோல்விக்கு பின்பும் நற்செயல் - ராகுல் காந்தியை பாராட்டும் நெட்டிசன்கள்

Published On 2020-02-17 06:00 GMT   |   Update On 2020-02-17 06:06 GMT
தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த பின்பும் நற்செயல் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.



அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி என இருவரும் கைகுலுக்கி ஒருவொரை ஒருவர் பார்த்து சிரிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம், டெல்லி சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்பும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி புன்னகையுடன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார் எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள எட்டு தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி இருவரும் கைகுலுக்கி ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கும் புகைப்படம், "இது தான் சகோதரத்துவம். தேர்தலில் மோசமான தோல்விக்கு பின்பும், ராகுல் காந்தி அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டுகிறார்." எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



ஆய்வு செய்ததில் இந்த புகைப்படம் ஜனவரி 26, 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த பழைய புகைப்படம் இருவரும் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போது எடுக்கப்பட்டது என புகைப்படங்களை வெளியிடும் வலைதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமீபத்திய டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தியும் சந்தித்தாக எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.


Tags:    

Similar News