செய்திகள்
பிரதமர் மோடி 16ம் தேதி வாரணாசி பயணம் - தீனதயாள் உபாத்யாயா சிலை திறப்பு
தீனதயாள் உபாத்யாயா சிலை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி வாரணாசி செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்ல உள்ளார்.
வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டு உள்ள தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும், நினைவு மண்டபத்தில் உருவாக்கப்பட்ட 63 அடி உயர பஞ்ச லோக சிலையை திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, 30க்கு மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.