செய்திகள்
வேட்பாளரின் வழக்கு விவரங்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்பு
வேட்பாளர்களின் வழக்கு விவரங்களை பத்திரிகை, கட்சியின் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங். செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
வேட்பாளர்களின் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை பத்திரிகைகளிலும், கட்சியின் வலைத்தளத்திலும் வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில், ‘‘மோடியும், பா.ஜனதாவும் மீண்டும் பெல்லாரி (கர்நாடகம்) கும்பலை காப்பாற்ற முயற்சிக்கிறது. கறைபடிந்தவர்களுக்கு போட்டியிட சீட் வழங்குவதற்கான காரணத்தை கூறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்கிறது. ஆனால் மோடி, கறைபடிந்தவர்களை எம்.எல்.ஏ.வாக மட்டுமல்ல, கொள்ளையடிக்கப்பட்ட துறைக்கே மந்திரிகளாகவும் ஆக்குவோம் என்கிறார். சுப்ரீம் கோர்ட்டு பிரதமர் மற்றும் கர்நாடக முதல்-மந்திரிக்கு கண்டனம் தெரிவிக்குமா?’’ என்று கூறியுள்ளார்.
வேட்பாளர்களின் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை பத்திரிகைகளிலும், கட்சியின் வலைத்தளத்திலும் வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில், ‘‘மோடியும், பா.ஜனதாவும் மீண்டும் பெல்லாரி (கர்நாடகம்) கும்பலை காப்பாற்ற முயற்சிக்கிறது. கறைபடிந்தவர்களுக்கு போட்டியிட சீட் வழங்குவதற்கான காரணத்தை கூறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்கிறது. ஆனால் மோடி, கறைபடிந்தவர்களை எம்.எல்.ஏ.வாக மட்டுமல்ல, கொள்ளையடிக்கப்பட்ட துறைக்கே மந்திரிகளாகவும் ஆக்குவோம் என்கிறார். சுப்ரீம் கோர்ட்டு பிரதமர் மற்றும் கர்நாடக முதல்-மந்திரிக்கு கண்டனம் தெரிவிக்குமா?’’ என்று கூறியுள்ளார்.