செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.