செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின்

டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி- கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2020-02-11 07:59 GMT   |   Update On 2020-02-11 08:08 GMT
டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 58 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றியை அக்கட்சியினர் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் நலனுக்காக கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



இதேபோல் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவு என்று கூறிய மம்தா, மோடி அரசின் குடியுரிமைக் கொள்கைகள் நிராகரிக்கப்படும் என்றும் வளர்ச்சி மட்டுமே கைகொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News