செய்திகள்
மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் 5 பேர் கைது
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் நக்சலைட் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாக்பூர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.
நக்சலைட்டு பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதனால் இந்த குழுவினரை வேட்டையாடும் பணியில் மாநில சிறப்பு தனிப்படையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் பாம்ரஹட் பகுதியில் சிறப்பு போலீசார் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில் அப்பகுதியில் பதுங்கி இருந்த 5 நக்சலைட்டு பயங்கரவாதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.