செய்திகள்
கள்ளக்காதல் ஜோடி

கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்

Published On 2020-01-29 08:01 GMT   |   Update On 2020-01-29 08:01 GMT
உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த அப்பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் காயமடைந்த இருவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பைசாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் அருகே உள்ள கண்ட் பிப்ரா பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாகி வெளியே கசிந்தது. இதனால் அந்த பெண்ணை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

எனினும் கள்ளக்காதல் ஜோடி அதனை கண்டுகொள்ளாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வாலிபர் தனது காதலியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து அடித்து உதைத்து தாக்கி உள்ளனர்.

மேலும் இருவரின் மூக்கையும் அறுத்து வீசி உள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சிலரை கைது செய்தனர். மேலும் அந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கின்றனர்.

Tags:    

Similar News