செய்திகள்
அக்சய் குமார் சிங்

நிர்பயா வழக்கில் புதிய தடை- மூன்றாவது குற்றவாளி மறுசீராய்வு மனு தாக்கல்

Published On 2020-01-29 05:07 GMT   |   Update On 2020-01-29 05:07 GMT
நிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளிகளில் ஒருவர், தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர், இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.



இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங், தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனை டெல்லி திகார் சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

4 குற்றவாளிகளில் முகேஷ் மட்டுமே கருணை மனு தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மூவரும் அந்த வாய்ப்பை இன்னும் பயன்படுத்தவில்லை. தற்போது மூன்றாவது நபராக அக்சய் குமார் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்னும் ஒரு குற்றவாளிக்கு அதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News