செய்திகள்
அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ்

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது

Published On 2020-01-25 15:59 GMT   |   Update On 2020-01-25 15:59 GMT
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 7 பேருக்கு பத்ம விபூஷன், 16 பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூ‌ஷன் விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இறப்புக்கு பிந்தைய விருதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், சமீபத்தில் மறைந்த உடுப்பி பெஷாவர் விஸ்வேஸ்வர தீர்த்தர் சுவாமிக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது. 

விளையாட்டுத் துறையில், குத்துச்சண்டை பிரிவில் மேரிகோம் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
Tags:    

Similar News