செய்திகள்
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுடெல்லி:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், அன்னிய முதலீடாக ரூ.305 கோடி பெற அனுமதி வழங்கப்பட்டதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி அமலாக்கத்துறையின் அலுவலகத்துக்கு ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், அன்னிய முதலீடாக ரூ.305 கோடி பெற அனுமதி வழங்கப்பட்டதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி அமலாக்கத்துறையின் அலுவலகத்துக்கு ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.