செய்திகள்
துவாரகா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆதர்ஷ் சாஸ்திரி காங்கிரசில் இணைந்தார்
டெல்லியின் துவாரகா தொகுதி எம்.எல்.ஏ.வான ஆம் ஆத்மி கட்சியின் ஆதர்ஷ் சாஸ்திரி, இன்று அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், டெல்லியின் துவாரகா தொகுதி எம் எல் ஏவான ஆம் ஆத்மி கட்சியின் ஆதர்ஷ் சாஸ்திரி இன்று அக்கட்சியி இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
துவாரகா தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ஆதர்ஷ் சாஸ்திரி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். மாநில தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் அகில் இந்திய பொறுப்பாளர் பிசி சாக்கோ உள்ளிட்டொர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
ஆதர்ஷ் சாஸ்திரி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல் அறிவித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. காங்கிரசில் இணைந்தது அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.