செய்திகள்
இம்ரான் கான், இந்தியா வர அழைப்பு விடுக்கப்படும் - மத்திய அரசு ‘திடீர்’ அறிவிப்பு
இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:
புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசு தலைவர்கள் கூட்டத்தை, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்த உள்ளோம். இது, பிரதமர் அளவிலான கூட்டமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 8 உறுப்பினர் நாடுகள், 4 பார்வையாளர் நாடுகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
“ஷாங்காய் அமைப்பில் பாகிஸ்தானும் இருப்பதால், அதன் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?” என்று கேட்டதற்கு “எல்லோரையும் அழைப்போம். ஆனால் அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்வது கஷ்டம்” என்று ரவீஷ் குமார் கூறினார்.
புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசு தலைவர்கள் கூட்டத்தை, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்த உள்ளோம். இது, பிரதமர் அளவிலான கூட்டமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 8 உறுப்பினர் நாடுகள், 4 பார்வையாளர் நாடுகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
“ஷாங்காய் அமைப்பில் பாகிஸ்தானும் இருப்பதால், அதன் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?” என்று கேட்டதற்கு “எல்லோரையும் அழைப்போம். ஆனால் அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்வது கஷ்டம்” என்று ரவீஷ் குமார் கூறினார்.