செய்திகள்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ல் தொடக்கம்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
ஜனவரி 31-ல் தொடங்கும் பாராளுமன்ற முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தொடரின் 2-வது பகுதி மார்ச் 2-ம் தேதி தொடங்கும். அந்த தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.