செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டு

நிர்பயா வழக்கு குற்றவாளி தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

Published On 2020-01-15 10:33 GMT   |   Update On 2020-01-15 11:01 GMT
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார்.

அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, முகஏஷ் சிங்கின் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தண்டனையை தாமதமாக்க போடப்பட்டுள்ள மனுவாக தெரிகிறது என்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தையே மீண்டும் நாடலாம் என தெரிவித்தனர்.

தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி முகேஷ் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஏற்கனவே கருணை மனு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News