செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து

Published On 2020-01-15 04:26 GMT   |   Update On 2020-01-15 04:26 GMT
அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களையும் காக்கும் இயற்கையை வணங்கும் பொருட்டு தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மத, பேதமின்றி மக்கள் பொங்கல் திருநாள் வாழத்துகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூறி வருகின்றனர். வீட்டு வாசலில் தோரணம் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு உற்சாகமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றது அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
Tags:    

Similar News