செய்திகள்
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர்

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி

Published On 2020-01-14 10:04 GMT   |   Update On 2020-01-14 10:04 GMT
ஜம்மு காஷ்மீரில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மாச்சில்செக்டர் பகுதியில் இந்திய ராணுவ நிலை உள்ளது. இங்கு திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டது. கடுமையான பனிப்பொழிவில் ராணுவ வீரர்கள் சிக்கினார்கள். இதில் 5 வீரர்கள் பலியானார்கள்.

இதேபோல, காந்தர்பால் மாவட்டம் சன்மார்க் பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 9 பொதுமக்கள் சிக்கினார்கள். இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News