செய்திகள்
குஜராத் ஆக்சிஜன் தொழிற்சாலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி
குஜராத்தில் உள்ள தனியார் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.
வதோதரா:
குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ளது பத்ரா தாலுகா. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கவாசத் கிராமத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள எய்ம்ஸ் ஆக்ஸிஜன் பிரைவேட் லிமிடெட்டில் இன்று காலை 11 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப்படையினர், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.