செய்திகள்
கெஜ்ரிவால் முன்பு கட்சியில் இணைந்த இக்பால்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சோயிப் இக்பால் ஆம் ஆத்மியில் இணைந்தார்

Published On 2020-01-09 15:45 GMT   |   Update On 2020-01-09 15:45 GMT
ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த சோயிப் இக்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இன்று இணைந்தார்.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த சோயிப் இக்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இன்று இணைந்தார். முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இணைந்த அவருடன் மேலும் 2 காங்கிரஸ் கவுன்சிலர்களும் இணைந்தனர்.

சட்டசபை தேர்தல் அறிவித்த சில தினங்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News