செய்திகள்
சோனியா காந்தி

சோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 11ம் தேதி நடைபெறுகிறது

Published On 2020-01-08 10:52 GMT   |   Update On 2020-01-08 10:52 GMT
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் 11ம் தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க. சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இதேபோல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் பல்வேறு கட்சிகள் எதிர்க்கின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். இதில் ஜே.என்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News