செய்திகள்
பாம்பு விஷம்

மேற்கு வங்காளத்தில் ரூ.1 கோடி பாம்பு விஷம் பறிமுதல்

Published On 2020-01-05 01:25 GMT   |   Update On 2020-01-05 01:25 GMT
ரூ.1 கோடி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மால்டா:

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட ஆங்கில பஜாரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிலர் பாம்பு விஷம் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு அறையில் இருந்த 3 பேர் கன்டெய்னர் ஒன்றில் பாம்பு விஷம் வைத்திருந்தனர். சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள அந்த பாம்பு விஷத்தை போலீசார் உடனடியாக கைப்பற்றினர். பின்னர் அந்த 3 பேரையும் அவர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த பாம்பு விஷம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எங்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1½ கோடி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News