செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து இன்று காலை அங்கு சென்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின்போது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நிசார் அகமது தர் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.