செய்திகள்
ப.சிதம்பரம்

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்? ப.சிதம்பரம் கேள்வி

Published On 2020-01-03 17:15 GMT   |   Update On 2020-01-03 17:15 GMT
நெல்லை கண்ணனை ஏன் 14 நாட்கள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி:

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ ஷா ஆகியோரை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவரை கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இதையெடுத்து  அவர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாட்கள் நெல்லை கண்ணனை விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும்.

பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?  என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், 

பாகிஸ்தான் அஹமதியாக்கள், இலங்கை தமிழர்கள், பூட்டானிய கிறிஸ்தவர்கள், மியான்மரீஸ் ரோஹிங்கியாக்கள் உட்பட துன்புறுத்தப்பட்ட அனைவருக்கும் குடியுரிமை சட்டம் சமமாக பொருந்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News