செய்திகள்
வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை

மேற்கு வங்காளத்தில் சோகம் - பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி

Published On 2020-01-03 11:34 GMT   |   Update On 2020-01-03 11:34 GMT
மேற்கு வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள நைஹாதி பகுதியில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News