செய்திகள்
மம்தா பானர்ஜி

எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்? பிரதமருக்கு மம்தா கேள்வி

Published On 2020-01-03 11:06 GMT   |   Update On 2020-01-03 11:06 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்? பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து 
முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வருகிறேன். மக்கள் அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

மோடி, இந்தியாவின் பிரதமர். ஆனால், அவர் எப்போதும் பாகிஸ்தானைப் பற்றியே பேசி வருகிறார். இதற்கு காரணம் என்ன? நாம் அனைவரும் இந்தியர்கள். நமது நாட்டு விவகாரங்கள் குறித்து பேசலாம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News