செய்திகள்
இல்திஜா முப்தி

காஷ்மீரில் மெகபூபா மகள் கைது

Published On 2020-01-03 03:09 GMT   |   Update On 2020-01-03 03:09 GMT
ஸ்ரீநகரில் நிருபர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டிருந்த மெகபூபாவின் மகள் இல்திஜா முப்தி குப்கார் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலிலும், விருந்தினர் மாளிகை காவலிலும் வைத்தது.

இந்த நிலையில் மெகபூபாவின் மகள் இல்திஜா முப்தி, நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுடன் கலந்துரையாடவும், அனந்தநாக்கில் உள்ள தனது தாத்தாவும் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனருமான முப்தி முகமது சயீத்தின் நினைவிடத்துக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஸ்ரீநகரில் உள்ள குப்கார் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News