செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு - மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

Published On 2020-01-02 10:16 GMT   |   Update On 2020-01-02 10:16 GMT
வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்யவேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை வீடியோ பதிவுசெய்ய வேண்டும். அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது.
Tags:    

Similar News