செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2019-12-31 13:07 GMT   |   Update On 2019-12-31 13:07 GMT
தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, இது தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News