செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ பெருமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவில் கொள்கிறோம். அவரது கோட்பாடுகள், உலகம் முழுமைக்கும் உள்ள மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.