செய்திகள்
சபரிமலைக்கு சென்ற 19 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம்
இந்த ஆண்டு யாத்திரைக்கு சபரிமலை சென்ற 19 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.
இவர்களில் 15 பேர் ஐயப்பன் சன்னிதானம் அமைந்துள்ள பம்பாவிலும் 4 பேர் கோட்டயம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்ததாக வாரியத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசியாக மரணம் அடைந்தவர் தமிழ்நாட்டின் கூடலூர் பகுதியை சேர்ந்த பக்தரான வி.ராஜேந்திரன்(61). இவர் அப்பச்சிமலை பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு யாத்திரைக்கு சபரிமலை சென்ற 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 15 பேர் ஐயப்பன் சன்னிதானம் அமைந்துள்ள பம்பாவிலும் 4 பேர் கோட்டயம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்ததாக வாரியத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசியாக மரணம் அடைந்தவர் தமிழ்நாட்டின் கூடலூர் பகுதியை சேர்ந்த பக்தரான வி.ராஜேந்திரன்(61). இவர் அப்பச்சிமலை பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.